"நாளை சுவாசிக்க காற்று வேண்டுமெனில் இன்றே மரம் நடுவீர்''- ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்ட செல்வகுமார்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தனி மனிதராக காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர், உடல் முழுவதும் மரக்கன்றுகளை சுமந்து வந்து மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டார்.



இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், திரும்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் வசித்து வருகிறேன். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7 வருடங்களாக மரம் வளர்ப்பு குறித்து தனி மனிதனாக மக்களிடைய விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். 

இதற்காக பிரத்யேகமாக ஆடை தைத்து அதில் 70 மரக் கன்றுகளை வைத்துள்ளேன். இது அனைத்தும் சேர்த்து 100 முதல் 120 கிலோ எடை வரை இந்த ஆடை இருக்கும். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களைக் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த 70 மரக்கன்றுகள் வைத்துள்ளேன்.

மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம் மரங்களை வெட்டியதே. தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நடவுசெய்தால் மட்டுமே மழை பெய்யும். 

தமிழ்நாடு முழுவதும், அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும், இலவசமாக மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறேன். 

நம் எதிர்கால சந்ததியினர் சுவாசிக்க நாம் தற்போதே மரம் நட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பனைமர விதைகளை நடவு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கும் சொந்த செலவில் பனை விதை வாங்கி விநியோகித்து வருகிறேன்.

மழை பெய்ய கோவில்களில் சிறப்புப் பூஜைகளையும், யாகங்களையும் நடத்துவதைத் தவிர்த்து மரம் நட அரசும், மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...